அக்டோபரில் தொடங்கும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு – ஹிந்தி மற்றும் மலையாளம் இரண்டிலும் உருவாகுமா?
‘த்ரிஷ்யம்’ திரைப்பட வரிசையின் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் 3’ அக்டோபரில் உருவாகவுள்ளதாக நடிகர் மோகன்லால், இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி இணைந்து அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே நேரத்தில் ஹிந்தி பதிப்பின் படப்பிடிப்பும் அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜய் தேவ்கான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, முந்தைய பாகங்களை இயக்கிய அபிஷேக் பதக் இயக்குநராகவும் இருந்துள்ளார். படக்குழு, 3 மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஹிந்தி பதிப்பும் மலையாளத்தின் கதையே தொடருமா அல்லது தனித்த கதையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி படக்குழுவினர் ஜூலை மாத இறுதிக்குள் தெளிவாக அறிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் தகவல்படி, ‘த்ரிஷ்யம் 3’ தான் முழு கதையின் இறுதி பாகம் என்பது உறுதி. எனவே, ஹிந்தி பதிப்பின் சுயாதீன அறிவிப்பு ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.