WhatsApp Channel
டெல்லி போகல் பகுதியில் உள்ள நகைக்கடையில் ரூ.20 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி போகல் பகுதியில் உள்ள உம்ராவ் சிங் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத மூன்று பேர் அறைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைநகரில் இதுவரை பதிவான மிகப்பெரிய கொள்ளைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவுக்கும் திங்கட்கிழமைக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உம்ராவ் சிங் ஜூவல்லர்ஸ் கடை திங்கள்கிழமை மூடப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கடையை திறந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 2 பேரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post