WhatsApp Channel
தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இடங்களில் இரண்டு கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நடத்திய அதிகாரிகள் சாமிநாதன் குடும்பத்தினரை காரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. பிரபல பைனான்சியர் மணப்பாறை சாமிநாதனும் லட்சுமி காபி பவுடர் ஏஜென்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post