WhatsApp Channel
தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்தும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கன் மத்திய கிழக்கு நாடுகளில் முகாமிட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும், சனிக்கிழமை ஜோர்டானின் தலைநகர் அம்மானுக்கும் சென்று சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைக்கு திடீர் பயணமாக ஆண்டனி பிளாங்கன் சென்றார். அங்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்தும், மேற்குக் கரையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதித்தார்.
இந்நிலையில், காஸா மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆலோசனை நடத்தினார். பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இடைநிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள், தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு தலைவர்களும் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பல குழந்தைகள் மற்றும் பல அமெரிக்க குடிமக்கள் உட்பட ஹமாஸால் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் ஜோ பிடன் நெதன்யாகுவுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
Discussion about this post