WhatsApp Channel
முதலாம் ஆண்டு மாணவியை ராகிங் செய்து மொட்டையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியை அதே கல்லூரியின் மூத்த மாணவர்கள் மொட்டையடித்து ராகிங் செய்தனர். ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவியை தாக்கி, மொட்டையடித்து, ராகிங் செய்தது தெரியவந்தது.
முதலாம் ஆண்டு மாணவியை ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post