WhatsApp Channel
தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முடிந்ததும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மழை காரணமாக 5க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தண்டவாளத்தில் கிடக்கும் மரங்கள், மண் சரிவுகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ரயில் சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த பின், மலை ரயில் சேவை துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழையால் நிலச்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை 4 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
Discussion about this post