WhatsApp Channel
பிரதோஷ மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் இக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி இம்மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் 14ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கி பேகி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து குறைந்த பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post