WhatsApp Channel
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும். கூட்டத் தொடர் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸுக்கு முன்னதாக முடிவடையும். ஆனால் தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சிகள் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும்.
எனவே, இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், அதாவது டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. கிறிஸ்துமஸுக்கு முன் தொடர் முடிவடையும் என்று தெரிகிறது.
அதில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. அம்மாசோதாக்களை ஆய்வு செய்த உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது. எனவே, அந்த 3 மசோதாக்களும் குளிர்கால கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என தெரிகிறது.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான முக்கியமான மசோதாவும் நிலுவையில் உள்ளது. மழைக்கால அமர்வில் அம்மாசோதா தாக்கல் செய்யப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் உள்ளார். இந்த மசோதா அவர்களை கேபினட் செயலாளர் அந்தஸ்துக்கு மாற்றுவதை சாத்தியமாக்குகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சுயாட்சியை பாதிக்கும் வகையில் இந்த மசோதா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post