WhatsApp Channel
போருக்கு இடையே, புதிய பள்ளி திறப்பு விழாவில் இஸ்ரேல் கல்வி அமைச்சர் யோவ் கிஷ் கலந்து கொண்டார்.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3,000 பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், நாட்டின் எல்லைக்குள் நுழைந்து இசை விழாவில் பங்கேற்றவர்கள் உட்பட எல்லைப் பகுதியில் தங்கியிருந்தவர்கள் மீதும் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஹமாஸின் தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இக்குழுவினர் 241 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்தது. இதனையடுத்து இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், எங்களின் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் வெற்றி பெற விடமாட்டோம் என்றார்.
நடந்து வரும் போருக்கு மத்தியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பள்ளி காசா அருகே உள்ள தாமர் மண்டல கவுன்சில் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் இஸ்ரேல் கல்வி அமைச்சர் யோவ் கிஷ் கலந்து கொண்டார்.
ஹமாஸின் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இஷ்கோல் பிராந்திய சபையின் குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இவர்களது குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் படுகொலை செய்யப்பட்ட கிப்புட்ஸ் பெயேரி சமூகத்தின் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த புதிய பள்ளியில் 15 புதிய வகுப்பறைகள் உள்ளன. இது 400 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியில், 1 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, 6 வகுப்பறைகளும், 7 முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 9 வகுப்பறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.இப்பள்ளி அருகே, ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் உள்ளன.
Discussion about this post