WhatsApp Channel
தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேனை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். சோதனையில் வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், 25 வழக்கமான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வத்தலக்குண்டு அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். சோதனையில் வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வேனில் வந்தவர்களிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர். விசாரணையில், வேனில் இருந்தவர்கள், மதுரையில் உள்ள 3 நகைக்கடைகளுக்கு நகைகளை கடத்தி செல்வதாக கூறியதாகவும், ஆனால் நகைகளை கொண்டு செல்ல உரிய அனுமதி பெறாமல் வேன் நகைகளை கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் உதவி தேர்தல் அதிகாரி மற்றும் தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் நிலக்கோட்டை சார் கருவூலத்தில் நகைகளை ஒப்படைத்தனர்.
Discussion about this post