WhatsApp Channel
மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கேட்டரிங் நிறுவனங்கள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய நேரடி மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசு மானியங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்ற பின்னர் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உணவு விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. விநியோக நிறுவனங்கள் முறையிட்டிருந்தன. கடந்த மாதம் நடந்த சபைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விவாதிக்கப்பட்டது.
மேலும், கல்வி மற்றும் நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மத்திய மற்றும் மாநில கல்வி வாரியம் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்படுகிறது.
Discussion about this post