மோகன் பகவத் வருகையையொட்டி கன்யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….

0

கன்யாகுமரியில் தங்கி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு காரில் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

மோகன் பகவத் வருகையையொட்டி கன்யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்யாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்குச் செல்லும் அவரை விவேகானந்த கேந்திரா நிர்வாகம் வரவேற்றது. பின்னர் மத்திய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கேயே தங்குகிறார்.

நாளை (செவ்வாய்கிழமை) காலை விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்த மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24ம் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதுடன், நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் செல்கிறார். அன்று இரவு கன்யாகுமரியில் தங்கும் அவர், காரில் திருவனந்தபுரம் சென்று 25ம் தேதி காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

மோகன் பகவத் வருகையையொட்டி கன்யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் கன்யாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here