Crowdstrike புதுப்பித்தலில் ஏற்பட்ட மாற்றங்கள் மென்பொருள் இடையூறுகளை ஏற்படுத்தியதாக Crowdstrike தலைவர் மற்றும் CEO ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்கினார்.
பெரும்பாலான மைக்ரோசாஃப்ட் சேவைகள் மென்பொருள் புதுப்பிப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. புதிய அப்டேட்டிற்குப் பிறகு தங்கள் கணினியில் ‘புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்’ வருவதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். பெரும்பாலான விண்டோஸ் பயனர்கள் மரணத்தின் நீல திரையை அனுபவித்திருக்கிறார்கள்
இதன் காரணமாக விமான சேவைகள், சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கியுள்ளன.
அவர் மேலும் கூறியதாவது:- இது சைபர் தாக்குதலோ, பாதுகாப்பு மீறலோ அல்ல. Crowdstrike புதுப்பிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மென்பொருளில் ஒரு கோளாறை ஏற்படுத்தியது.
பிரச்சனை அடையாளம் காணப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Mac மற்றும் Linux பயனர்கள் பாதிக்கப்படவில்லை. Crowdstrike வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக Crowdstrike இணையதளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படும், என்றார்.