சீமானின் மெய்க்காப்பாளர் அமல்ராஜ் கைது… நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக முன்னாள் ராணுவத்தினர் எச்சரிக்கை

0

முன்னாள் ராணுவ வீரரும் சீமானின் மெய்க்காப்பாளருமான அமல்ராஜ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சங்க உறுப்பினர் சுரேஷ் பாபு, காவல் ஆய்வாளர் தனது அதிகாரத்தை மீறி சீமானின் வீட்டுக் காவலாளி அமல்ராஜை அவரது சாதியைச் சொல்லித் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதல்வர் இந்த சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கங்களையும் ஒன்றிணைத்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார். இது தொடர்பாக தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here