WhatsApp Channel
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கூடாது என அண்ணாமலை கூறியுள்ளார்.
இஸ்லாமிய கைதிகள் விடுதலை.?
முஸ்லிம் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பேசினர். அப்போது, தண்டனை முடிந்து சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
முதற்கட்டமாக 49 ஆயுள் தண்டனை கைதிகளின் கோப்புகள் மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதலுக்காக 24.8.2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டு அதில் 20 கைதிகள் இஸ்லாமிய கைதிகள். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும், சிறைக் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள அறிக்கையில், கோவை போன்ற அமைதியான நகரில், 1998ல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெடிகுண்டு வெடித்ததில், 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது. குண்டுவெடிப்பு ஒரு கொடூரமான செயல் என்றும் அது மீண்டும் வலியுறுத்தியது. இதையெல்லாம் மீறி, தமிழக சட்டசபையில், கோவை குண்டுவெடிப்பு மற்றும் பிற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பயங்கரவாதிகளை விடுவிப்பது குறித்து விவாதம் நடந்தது.
விடுவிக்க வேண்டாம்
1998 குண்டுவெடிப்பில் இருந்து இன்னும் மீளாத சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவே இந்த விவாதம் நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில், சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்திற்கு நிறமில்லை. தீவிரவாதத்தை ஒரு சமூகம், ஜாதி அல்லது மதத்திற்குள் மட்டும் நிறுத்திவிடாதீர்கள். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை வெளியே விடாதீர்கள்.
வெளியில் விடாதீர்கள்
தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். இன்னும் தீவிரவாதம் அங்கே போகவில்லை, இன்னும் இருக்கிறது. அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று அர்த்தமில்லை. மேலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்று நான் கூறவில்லை. பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்றார் அண்ணாமலை.
Discussion about this post