WhatsApp Channel
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில், 230 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 17ம் தேதி ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும்.
இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வரும் 30ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 2ம் தேதி.
இந்த தேர்தலில் 5.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஆளும் பாஜக 136 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
Discussion about this post