WhatsApp Channel
இன்றைய தினம், நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் உள்ள, மூத்த தமிழறிஞர் அமரர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களது திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கி மாவட்டக் கல்வி அலுவலர், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு உதவி அலுவலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் என தனது தமிழ்ப்பற்றாலும், உழைப்பாலும் உயர்ந்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தவர். சிலப்பதிகாரத்தின் மீதுள்ள தீராக் காதலினால், சிலம்பொலி பட்டம் பெற்றவர்.
எளிமை, இனிமை, உழைப்பு, அறிவு வளம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, என உயர் நாகரிகத்தின் மொத்த உருவமாக விளங்கிய ஐயா சிலம்பொலி செல்லப்பனார் அவர்களது தமிழ்த் தொண்டு என்றும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும்.
Discussion about this post