WhatsApp Channel
தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதனால் தெலுங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் இம்முறை பாரதீய ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பாஜகவும் தேர்தல் களத்தில் உள்ளது. இதனால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. நவம்பர் 29ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இதனால், தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று தெலுங்கானாவில் உள்ள ஜக்தியால் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அமித் ஷா கூறியதாவது:- ஓவைசிக்கு பயந்து ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட சந்திரசேகர் ராவ் அஞ்சுகிறார். ஆனால், ஒவைசிக்கு நாங்கள் பயப்படவில்லை. ஹைதராபாத் மீட்பு தினத்தை மாநில தினமாக கொண்டாடுகிறோம்.
ஒவைசி சமாதான அரசியலில் ஈடுபட்டுள்ளார். கேசிஆர் கட்சியின் சின்னம் கார். ஆனால் அவர்களுக்கு கட்சி வழிகாட்டுதல் இல்லை. பாஜக ஆட்சி அமைத்தால், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும்,” என, பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் கூறியுள்ளது.
Discussion about this post