WhatsApp Channel
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜனநாயகத்தின் திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் அஜய் படூ தலைமையில் இந்திய தேர்தல் ஆணையம், முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பின்னர் மதியம் 2.30 மணிக்கு வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாலை 5.30 மணி வரை ஆலோசனை நடத்துகின்றனர்.
Discussion about this post