WhatsApp Channel
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் நேற்று இரவு முதல் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
18வது லோக்சபா தேர்தல் தேதியை மார்ச் 8 மற்றும் 9ம் தேதிகளில் இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
களத்தில் உள்ள கட்சிகள்: மத்தியில் ஆளும் பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் நம்பிக்கையில் உள்ளது. பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் “இந்தியா” கூட்டணியை அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தே.மு.தி.க.வும், “இந்தியா” கூட்டணிக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
விடியல் ஆலோசனை: இந்நிலையில், பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம், நேற்று இரவு துவங்கி, விடிய விடிய நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் நள்ளிரவு தாண்டி 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், எம்.பி. முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்?: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, பா.ஜ.,வின் திட்டம். நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.,வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் என பா.ஜ., மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெறலாம்; இன்றைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் வேட்பாளர்களும் இடம் பெறலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2019 தேர்தல் முடிவுகள்: 2019 மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 67.40%. தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக 303 இடங்களை வென்று தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தேர்தலில் பாஜக 37.30% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 19.46% வாக்குகள் பெற்றது. 2019 தேர்தலில் திமுக 24 இடங்களில் வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22, திரிணாமுல் காங்கிரஸ் 22, சிவசேனா 18, ஐக்கிய ஜனதா தளம் 16, பிஜு ஜனதா தளம் 12, பகுஜன் சமாஜ் கட்சி 10 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றன.
Discussion about this post