WhatsApp Channel
பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை கொண்டு செல்ல அனுமதி உள்ளது.
அதையும் மீறி ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 16ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ.82.63 கோடி ரொக்கம், ரூ.4.34 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.84 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.89.41 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.15.43 கோடி மதிப்பிலான இலவச பரிசுகளும் அடங்கும்.
Discussion about this post