ஈரான்-இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

0

ஈரான்-இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக மீட்டு பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை தொடர்ந்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது: தற்போது கடும் போர் நிலவிக்கொண்டிருக்கும் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற தமிழர்கள் அந்நாடுகளில் சிக்கித் தவித்து வருவது மனதை நெகிழ வைக்கும் விடயமாகும். குறிப்பாக, மீன்பிடித் தொழிலுக்காக ஈரானில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் பணமின்றி நாடு திரும்ப முடியாத நிலைமையில் உள்ளனர்.

தமிழக கடற்பரப்பளவு பரந்திருப்பதையையும்விட்டு, நம் மீனவர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று வாழ வேண்டிய கட்டாய நிலை வருவது வேதனைக்குரியது. இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்புடன் மீட்டுத் தாயகத்துக்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்திய தூதரகங்கள் மூலம் மீட்பு பணிகளை வலுப்படுத்துவதுடன், பயணச் செலவுகள் முழுமையாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசும் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here