கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தது.
அப்போது, கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆளுநரிடம் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்றும், இந்த மரணங்களில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.