கும்பகோணம் மகாமகமும் கரூர் பிரச்சாரமும்! வரலாற்றின் கருப்பு பகுதி! மக்களைப் பற்றிச் சிந்திக்காத தலைவர்கள்

கரூரில் விஜய் பேச்சு முடிவதற்கு முன்பே ஒவ்வொருவரும் கூட்டத்தில் கீழே மயங்கிப் விழத் தொடங்கினர்.. விஜய் வாகனத்தைச் சுற்றியுள்ள அனைத்து பேரும் மயங்கியதும் பதற்றமும், அசௌகரியமும் சேர்ந்து வந்தது.. இறுதியில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைவர்கள் பங்கேற்கும் கூட்ட நெரிசலில் இத்தனை பேர் பலியாகியிருப்பது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சம்பவம், அன்றைய கும்பகோணம் மகாமகம் சம்பவத்தையும் நினைவூட்டுகிறது.

1992ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தமிழகம் நிலைகுலைந்தது. கும்பகோணத்தின் கருப்பு பக்கத்தில் இன்னும் கரைபடிக் கிடக்கிறது மகாமகம் சம்பவம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பதவியேற்ற பிறகு, கும்பகோணத்தில் மகாமக நிகழ்ச்சி வந்தது.

12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், தமிழகம் முழுவதிலும் ஏராளமான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்தனர், மகாமக குளத்தில் நீராட ஆவலுடன் காத்திருந்தனர்.. லட்சக்கணக்கான பக்தர்கள் இருந்ததாலும் கூட்ட நெரிசலை சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்நேரத்தில், திடீரென ஜெயலலிதா சசிகலாவுடன் குளத்தில் நின்றார். குளத்தில் குளிப்பது என்ற விருப்பத்தை அவர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் திகைத்து போனார்கள்..

அங்குள்ள பக்தர்களை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த நிலையில், முதல்வரின் அறிவிப்பு அவர்கள் திட்டத்தை குழப்பியது. ஆனாலும் அடுத்த நிமிடமே பாதுகாப்பில் அனைத்து அதிகாரிகளும் கவனத்தை செலுத்தினர்.

ஜெயலலிதா குளிக்க குளியலறைகள் கட்டப்பட்டன.. முதலமைச்சர் குளத்தில் நீராடும் வரை மற்றோர் யாரும் குளிக்கக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிருப்தியடைந்து, காவல்துறையின் அறிவிப்பையும் மீறி குளத்தில் நுழைந்தனர்.

ஏற்கனவே குளிக்க வந்த பக்தர்கள் ஜெயலலிதாவைப் பார்க்கும் ஆவலில் நிற்காமல் இருந்தனர். இதனால் கூட்டம் பெருகத் தொடங்கியது.

மகாமக குளத்தில் 40 ஆயிரம் பேர் மட்டுமே குளிக்க முடியும். ஆனால் இரு மடங்கு கூட்டம் வருவதால் போலீசார் சமாளிக்க முடியவில்லை.

ஜெயலலிதா குளியலறை பகுதிக்கு வந்ததும், கூட்டத்தினர் ஆரவாரத்துடன் முண்டியடித்தனர். தீர்த்தவாரி ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டு, வானை நோக்கி மூன்று முறை தேவாரம் சுட்டார்.. நெரிசலில் சிக்கிய பக்தர்கள் பதறி ஓடத் தொடங்கினர்.

பாங்கூர் தர்மசாலா கட்டட வெளியே இருந்த கிரில் சுவரை ஏற முயன்ற பலர் இறந்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜெயலலிதா, சசிகலா நீராடினார்கள். ஆனால் கூட்ட நெரிசலில் 48 பக்தர்கள் உயிரிழந்தனர்.

அதிர்ச்சி என்னவென்றால், இவ்வளவு அசம்பாவிதங்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு வராதபடி நடந்தது. முதல்வரின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தப்பட்டு, புனித நீராடல் முடிந்ததும் ஜெயலலிதாவை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

கும்பகோணத்தில் பல காலமாக மகாமகம் நடைபெறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட விபத்து முன்பு நடந்ததில்லை.

இன்றைய நிகழ்வு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அசம்பாவிதமாக பார்க்கப்படுகிறது.

கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையின் தவறுகளும், அதிகாரிகளை பின்பற்றாத தொண்டர்களும் இதற்குக் காரணம்.

எப்படிப்பார்த்தாலும், இந்த துயர சம்பவம் கட்சிக்கு மிகப்பெரிய சவால். தேர்தல் முன், இந்த மரணங்கள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மக்களின் வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்க நினைக்கும்வர்கள், மக்களின் பாதுகாப்பையும் நலனையும் புறக்கணித்து முடிவெடுப்பதால் இப்படியான விபத்துகள் உருவாகின்றன. இது அன்றைய ஜெயலலிதாவுக்கும், இன்றைய விஜய்க்கும் பொருந்தும் உண்மை.

Facebook Comments Box