வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக அரசின் பாசிச அணுகுமுறையை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையை திமுக தனது அரசியலுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அவர், பாஜகவை தடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்ற அடக்குமுறைகளால் திமுக நிர்வாகத்தின் தோல்வியை மறைக்க முடியாது என்றும் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் அடக்குமுறையை கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.