தவெக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ்…

0

தவெக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை விக்கிரவாண்டி போலீசார் வழங்கினர்.

நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாநாட்டு மேடையின் அகலம், நீளம், மருத்துவ வசதிகள், பார்க்கிங் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டு விக்கிரவாண்டி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கு, மாநாடு அனுமதிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது, தவெக  நிர்வாகிகள் அளிக்கும் பதிலை பொறுத்தே தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here