WhatsApp Channel
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்தது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை, ஆனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடரில் மட்டுமே, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் தனது அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்று சென்னை வந்தனர்.
11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். நடப்பு உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post