WhatsApp Channel
தென்மேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள தேஜ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய தினம் நள்ளிரவில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் புயலாக உருவானது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மிக தீவிர புயலாக மாறி ஓமன் மற்றும் ஏமன் இடையே வரும் 25ம் தேதி காலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலால் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post