WhatsApp Channel
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா சபிக் களமிறங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் வித்தியாசத்தில் பிரிந்தது. இமாம் உல் ஹக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சபிக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய சபீக் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சவுத் ஷகீல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஷதாப் கான் (40), இப்திகார் அகமது (40) ஆகியோரின் அதிரடியால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்க உள்ளது.
Discussion about this post