WhatsApp Channel
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் எட்வர்ட்ஸ் அரை சதம் கடந்தார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஓ டவுட் ரன் ஏதும் எடுக்கவில்லை.
அடுத்து பரேசி நிதானமாக விளையாடி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் எட்வர்ட்ஸ் நிதானமாக விளையாடினாலும் மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. அக்கர்மேன் 15 ரன்களிலும், டி லீட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் எட்வர்ட்ஸ் அரை சதம் கடந்தார். அவர் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணி சார்பில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்க உள்ளது.
Discussion about this post