WhatsApp Channel
ஐபிஎல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.
அதன்பின், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பேட்டியில் கூறியதாவது, இது நிச்சயம் ஏமாற்றம்தான். இதிலிருந்து நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அதிலிருந்து கற்றுக்கொள்வதுதான்.
பந்து வீச்சாளர்கள் 15-16 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் இறுதிவரை சென்று விரைவாக ஸ்கோர் செய்வார்கள். அது இந்த விளையாட்டில் நடந்தது. மார்ஷும், வார்னரும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
ஆனால் நடு ஓவர்களில் சில விக்கெட்டுகளை இழந்தோம். இறுதி ஓவரில் நோர்ஜே பந்து வீச வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அப்படி பந்துவீசும்போது சில நேரங்களில் அதிக ரன்களுக்கு செல்லலாம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன். அவர் கூறியது இதுதான்.
Discussion about this post