WhatsApp Channel
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர்களுக்கு முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 141 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோராக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக சென்னை அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டபோது சிவம் துபே ஆட்டம் இழந்தார்.
அதன்பிறகு தோனி களம் இறங்க ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், டிரஸ்ஸிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்துக்கொண்டே தனது தொப்பியை எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள் நுழைய முயல்வது போல் மீண்டும் டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்றார். இதைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பொலியால் மைதானம் அதிர்ந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் தோனி, பார்வையாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அரங்கமே அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்தார்.
இந்த காட்சியை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் துஷார் தேஷ்பாண்டே கூறுகையில், ஜடேஜாவை அவ்வாறு செய்யுமாறு தோனி தான் கூறினார். இதுபற்றி தேஷ்பாண்டே கூறும்போது, பேட்டிங்கிற்கு வெளியே செல்வது போல் நடந்து கொள்ளுங்கள். பிறகு திரும்பி வா. அதற்குள் மைதானத்திற்குள் சென்றுவிடுவேன்’ என ஜடேஜாவிடம் தோனி கூறினார்.
Discussion about this post