WhatsApp Channel
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள் கொல்லப்பட்டனர்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது
அன்று முதல் இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார். காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,482 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 76,049 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. காஸா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். காஸா மக்களுக்கு உணவு வழங்குவதை இஸ்ரேல் ராணுவம் தடுத்ததால் காசாவில் ரமலான் கொண்டாட்டங்கள் ஸ்தம்பித்துள்ளன.
இந்நிலையில், காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன்கள் ஹஷேம், அமீர், முகமது ஆகிய 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உறுதி செய்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்தாலும், அவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் என்றும், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறினார். ஏனெனில் இந்த படுகொலைகள்.
Discussion about this post