WhatsApp Channel
எலோன் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், ‘எக்ஸ்’ இணையதளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியாவில் டெஸ்லாவின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்தபோது, 2024ல் தான் இந்தியா வரும் என எலான் மஸ்க் கூறியது குறிப்பிடத்தக்கது.
“பிரதமர் மோடியை இந்தியாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று எலோன் மஸ்க் தனது எக்ஸ் இணையதளத்தில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
Discussion about this post