WhatsApp Channel
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வாகனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டப் பிரசாரங்களில் அமித் ஷா பங்கேற்று, ஓட்டு சேகரிக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, கன்யாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். ஆனால், கடைசி நேரத்தில் திடீரென பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார். மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்கு செல்கிறார். அங்கு சிவகங்கை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்று ஓட்டு சேகரிக்கிறார். இந்த வாகன பேரணி ஒரு மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின், புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட திருமயம் கோட்டை பைரவர் கோயில் மற்றும் உடனுறை சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மாலை 5 மணிக்கு சமிதரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மதுரைக்கு சென்று பாமக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து 2 கி.மீட்டர் வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யப்படுகிறது. அடுத்து, மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார். மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் தக்கலைக்கு செல்கிறார். தக்கலையில் காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாகனப் பேரணியில் பங்கேற்கிறார். ராதாகிருஷ்ணன். பேரணி ஒரு மணி நேரம் நடைபெறும்.
அதன்பின், திருவனந்தபுரம் திரும்பும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்றடைகிறார். அங்கு மதிய உணவுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் திருவாரூர் பயணம். மாலை 3 மணிக்கு நாகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், நாகை தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம் ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர், திருச்சி விமான நிலையம் திரும்பி, அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணம். தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தென்காசி மாவட்டம் இலஞ்சிக்கு செல்கிறார். அங்கு தென்காசி டவுன் பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை 5 கி.மீட்டர் வாகனப் பேரணியில் பங்கேற்று தென்காசி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பிறகு தூத்துக்குடி சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Discussion about this post