WhatsApp Channel
6வது மற்றும் கடைசி அணி சென்னையின் எஃப்சி. (27 புள்ளிகள்) பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது
12 அணிகள் பங்கேற்கும் 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி., ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணியில் வில்மர் ஜோர்டான் கில் (19வது நிமிடம், 62வது நிமிடம்), மடிக் தலால் (43வது நிமிடம்), லூகா மஜ்சென் (70வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்த தோல்வியுடன் ஈஸ்ட் பெங்கால் அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது. லீக் சுற்றை முடித்த ஈஸ்ட் பெங்கால் அணி 6 வெற்றி, 6 டிரா, 10 தோல்வி என 24 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர்ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், சென்னையின் எஃப்சி 6வது மற்றும் கடைசி அணியாகும். (27 புள்ளிகள்) நேற்று பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னையின் எஃப்சி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் 14ம் தேதி எப்சி கோவாவை எதிர்கொள்கிறது. இந்த விளையாட்டின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
Discussion about this post