WhatsApp Channel
தொடர் மழை காரணமாக கன்யாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்யாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post