WhatsApp Channel
புதுக்கோட்டை மணமேல்குடி பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மாமேல்குடி பகுதியில் மார்க்கெட் சாலையில் பட்டாசு கடை நடத்தி வரும் காளிமுத்து வழக்கம்போல் அதிகாலை கடைக்கு சென்று இன்வெர்ட்டரை சார்ஜ் செய்துவிட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், இவரது கடையில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் கடை வீதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் மற்ற கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post