WhatsApp Channel
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Discussion about this post