WhatsApp Channel
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் 3-ந்தேதி புயலாக வலுவடையும். அதன்பின், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடகிழக்கு-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் வரும் 4ம் தேதி அதிகாலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post