WhatsApp Channel
கனமழை காரணமாக கன்யாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தென்னிலங்கைக் கடலோரம் மற்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக கன்யாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்யாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Discussion about this post