WhatsApp Channel
இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம் லாக்ரேஞ்ச் பாயின்ட்-1க்கு சென்று கொண்டிருக்கிறது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ரேஞ்ச்’ புள்ளி-1ஐ விண்கலம் அடையும் என்றும், அங்கிருந்து விண்கலம் சூரியனை ஆய்வு செய்யத் தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: ஆதித்யா எல்-1 விண்கலம், ‘லாக்ரேஞ்ச்’ பாயின்ட்டில் வரும் ஜனவரி 6ம் தேதி நிலைநிறுத்தப்படும்.இதுகுறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது;-
“ஆதித்யா எல்-1 ஜனவரி 6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ‘லாக்ரேஞ்ச்’ புள்ளியை அடையும். அதைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 இன்ஜின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உந்துவிசையுடன் ஒளிவட்டப் பாதையில் நுழையும்.
‘லாக்ரேஞ்ச் பாயிண்ட்’ என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை நடுநிலையாக இருக்கும் பகுதி. இருப்பினும், சந்திரன், செவ்வாய், வீனஸ் போன்ற பிற கிரகங்களின் தாக்கத்தால், முழுமையான நடுநிலை இல்லை.”
சோம்நாத் கூறினார்.
Discussion about this post