WhatsApp Channel
இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேற்று (01-01-2024) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (02-01-2024) தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவும்.
இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது.
02.01.2024 மற்றும் 03.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
04.01.2024 மற்றும் 05.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
06.01.2024 முதல் 08.01.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். காலையில் லேசான மூடுபனிக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். காலையில் லேசான மூடுபனிக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 30-31°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24°C ஆகவும் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post