WhatsApp Channel
தமிழகம் முழுவதும் வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, எழும்பூர், செனாய் நகர், நித்தகரை உள்ளிட்ட 10 இடங்களில் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Discussion about this post