WhatsApp Channel
விஜயகாந்த் தனது நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் என்று பிரதமர் மோடி கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2023-ம் ஆண்டின் இறுதியில் தமிழக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக உள்ளார். தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த்.
திரைப்படங்களில் அவரது நடிப்பு மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. விஜயகாந்தின் மரணம் திரையுலகிற்கு மட்டுமல்ல; அரசியலுக்கும் மக்களுக்கும் பெரும் இழப்பு. ஒரு அரசியல்வாதியாக விஜயகாந்த் தேசிய நலனை முன்னிறுத்தினார். விஜயகாந்த் எல்லாவற்றையும் விட தேசத்தை நேசித்தார்” என்று பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post