WhatsApp Channel
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சென்னை புழல்-அம்பத்தூர் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள மூலப்பொருட்கள் இருந்த ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், உடைகள், வாகன டயர்கள் எரிந்து நாசமானது.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post