அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனையில், 30 ஆண்டுகள் எந்தவித தண்டனைக் குறைப்பும் இன்றி அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்,

“திமுக அரசு ஏன் இவ்வளவு விரைவில் ஞானசேகரன் ஒருவரை மட்டுமே குற்றவாளியாக தீர்மானித்து வழக்கை முடிக்க முயற்சித்தது? FIR-ல் குறிப்பிடப்பட்ட ‘SIR’ யாரெனத் தெரியவில்லை. அந்த ‘SIR’ விசாரணையின் போதே ஏன் புறக்கணிக்கப்பட்டார்? யார் அவரை பாதுகாத்தது? இந்தக் கேள்விகள் நிரந்தரமாய் நிலைக்காது. ஸ்டாலின் அவர்களே நினைத்தாலும், அந்த ‘SIR’-ஐ எவராலும் பாதுகாத்தல் சாத்தியமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

“இந்த வழக்கில் குற்றவாளியாகிய திமுக ஆதரவாளர் ஞானசேகரனுக்குத் தண்டனை கிடைப்பதைச் சாத்தியமாக்கியது, சமூக ஊடகங்களிலிருந்து மக்கள்வரை தொடர்ந்த அதிமுகவின் போராட்டமே. பாதிக்கப்பட்ட மாணவியின் உரிமைக்காக எப்போதும் நாங்கள் குரல் கொடுக்கிறோம். அதனால் தான் இன்று #யார்_அந்த_SIR என்ற கேள்வியுடன் நீதிக்காகக் குரலெழுப்புகிறோம். திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்ததும், மறைக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் வெளிவரும்” என்றார்.

Facebook Comments Box