தமிழ்நாட்டில் கொரோனா அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறையாததையடுத்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கணிசமாக தொற்று குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கலாம் என நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.எனவே தமிழ்நாட்டில் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.