தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த காற்று காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் முழுவதுமாக மணல் பரவி கிடப்பதால், அரிச்சல்முனைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் பயணிக்க கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தென்மேற்குப் பருவக் காற்று துவங்கியதனால், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் விளைவாக, கடந்த சில நாட்களாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் மற்றும் அரிச்சல்முனை போன்ற கடற்கரை பகுதிகளில் மணல் கலந்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது.
இதனால், ராமேசுவரத்திலிருந்து அரிச்சல்முனை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மணல் திரட்டாக கிடக்கிறது. அரிச்சல்முனை பகுதியிலும் மணல் பெருமளவில் குவிந்துள்ளது. இதனால், தனுஷ்கோடியை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தனுஷ்கோடி கடல் பகுதி மோசமான சூழ்நிலையுடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் கடலுக்கு அருகில் செல்லக் கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்குவதும், நீராடுவதும் தடைக்கப்படுள்ளது.
மேலும், மாலை 5 மணிக்கு பிறகு தனுஷ்கோடி பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.