முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு:
தந்தையின் கனவை நெஞ்சில் தாங்கி அதை நனவாக்கிய அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனையை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “அவரின் மேற்படிப்புக்கான அனைத்து செலவையும் அரசு மேற்கொள்ளும்” என சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும், “ராஜேஷ்வரி போன்ற மாணவிகள் ஐஐடி-க்கு சிறப்பையும், நமது திராவிட மாதிரிக்கு நீடித்த ஊக்கத்தையும் தருகிறார்கள். அதற்காக அரசு தொடர்ந்து செயல்படும்” என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, தந்தையை இழந்த வேளையிலும் ஜேஇஇ தேர்வில் தேசிய அளவில் 417-வது இடம் பெற்று, ஐஐடியில் இடம் பெற்றுள்ளார். இது ஒரு பாராட்டத்தக்க சாதனை. அவருக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
டிடிவி தினகரன் பாராட்டு:
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தந்தையின் கனவை தன் இலட்சியமாக கொண்டு, விடாமுயற்சியுடன் ஐஐடியில் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவரது உயர்கல்வி பயணம் சிறக்க என் நல்வாழ்த்துகள்” என்றார்.